ஐந்தாம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தலைவர்களுக்கு மரியாதை!!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
உடன் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன, கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சருக்கு, அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 390 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.