ஆமினி வேன் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்!!

 
Vellakovil

வெள்ளகோவில் அருகே ஆமினி வேனும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன். இவரது மனைவி தேவி. இவர்களது மகன் யோகேஸ்வரன் (26). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு திருமணம் செய்ய ஒரு பெண்ணை பார்த்து குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 

Accident

திருமண பேச்சுவார்த்தை குறித்து கலந்து ஆலோசிக்க வெள்ளகோவிலில் உள்ள அத்தை வீட்டிற்கு யோகேஸ்வரன் தனது உறவினர்கள் 6 பேருடன் ஆம்னி வேனில் இன்று காலை சென்றுள்ளார். ஆம்னி வேனில் தாய் மாமன் மருதாச்சலம் (65), யோகேஸ்வரனுடைய தாய் தேவி, அத்தை பிரமிளா(45) உள்ளிட்டோர் இருந்துள்ளனர். 

இவர்கள் வெள்ளகோவில் வந்து திருமணம் குறித்து கலந்து பேசிவிட்டு மீண்டும் திருப்பூருக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். ஆம்னி வேனை யோகேஸ்வரன் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் கரூர் - கோவை மெயின் ரோட்டில் ஓலப்பாளையம் அருகே செல்லும் போது எதிரே வந்த அரசு பேருந்தும் ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதியது. 

Kangayam PS

இந்த விபத்தில் பிரமிளா, யோகேஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காயம் அடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்கா தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தேவி உயிரிழந்த நிலையில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web