தமிழ்நாட்டில் நாளை நாடாளுமன்ற தேர்தல்.. தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து

 
Theatre

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் ஓட்டுப்போட வசதியாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Election

இந்த நிலையில் தேர்தலையொட்டி, வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் சினிமா காட்சிகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (19-ம் தேதி) தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது. அரசு தேர்தலுக்காக ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. எனவே திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒரு நாள் முழுவதும் 4 காட்சிகளை ரத்து செய்ய அதிகாரப்பூர்வமாக முடிவு எடுத்து அறிவித்துள்ளது. 2 காட்சிகள் மட்டுமே ரத்து செய்வதின் மூலமாக ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் அவர்கள் தான் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Theatre

தமிழ்நாடு முழுவதும் 1,126 திரையரங்குகள் உள்ளன என்றும் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.

From around the web