முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

 
EPS EPS

சென்னை ஐஐடி யில் டீ குடிக்கச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை ஏற்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

”சென்னை ஐஐடி கேன்டீனில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அச்ச நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளிய மு.க.ஸ்டாலின்  மாடல் அரசுக்கும் எனது கடும் கண்டனம்.

பெண்கள் கல்வியே சமூகத்தை உயர்த்தும்; அவர்கள் அதைப் பெறுவதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட வேண்டியது தங்கள் தலையாயக் கடமை என்பதை மத்திய மாநில அரசுகளும்; கல்லூரி நிர்வாகங்களும் உணரவேண்டும். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவன் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன்; இனியேனும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழ்நாட்டில் அமைத்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

திமுக அரசுக்கு மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் கடும் சோதனையை ஏற்படுத்தி வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை


 


 

From around the web