சென்ட்ரல் க்கு எம்ஜிஆர் பெயரா? அப்ப எக்மோருக்கு கலைஞர் பெயர் வையுங்க!! எம்.பி.க்கள் கோரிக்கை!!

தென்னக ரயில்வே அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற் 20 அதிகாரிகளில் 4 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்று தயாநிதி மாறன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். டிக்கெட் கொடுப்பவர், பரிசோதகர், உணவு கொடுப்பவர்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.
ஏன் எல்லாவற்றிலும் இந்தி ஆதிக்கம் இருக்கிறது என்று கிரிராஜன் எம்.பி. கேள்வி எழுப்பினார். லிஃப்ட் கூட வேலை செய்யவில்லை, வந்தேபாரத் போலத்தான் இருக்கிறது என்று அவர் கேலியும் செய்தார்.
இந்நிலையில் எம்.பி.க்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டின் போது அதிமுக ஆட்சியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று சென்னை சென் ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் ரயில் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது.
சென்னையின் மற்றொரு முக்கிய மற்றும் பழம்பெரும் ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சூட்டினால் இரு பெரும் ரயில் நிலையங்களுக்கு தமிழ்நாட்டின் இரு பெரும் தலைவர்களின் பெயர்கள் பொருத்தமாகத் தானே இருக்கும்.