கர்நாடகா ஆந்திரா கேரளாவையும் சேர்த்துக்கோங்க.. கடுப்பான ஜெயக்குமார்!!
May 2, 2025, 08:09 IST

மே தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு நன்மைகள் ஏதும் செய்யவில்லை, ஜெயலலிதா ஆட்சி தான் தொழிலாளர்களுக்கு நன்மைகள் செய்த ஆட்சி என்று கூறினார். அனைத்து தொகுதிகளையும் வெல்வோம் என்று சொன்ன முதலமைச்சரின் பேச்சு குறித்து செய்தியாளார்கள் கேட்ட போது,
“ ஏன் பக்கத்திலே உள்ள கர்நாடகா தொகுதிகளையும் சேர்த்துக்கோங்க ஆந்திரா, கேரளாவில் உள்ள தொகுதிகளையும் சேர்த்துக்கோங்க.மக்கள் இந்த ஆட்சியைத் தூக்கி எறிய 2026 ஐ எதிர்பார்த்து உள்ளார்கள். மக்கள் மத்தியில் வேண்டாம் வேண்டாம் திமுக வேண்டும் வேண்டும் அதிமுக என்ற குரல்கள் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.