திருமணமாகி பல வருஷமாகியும் குழந்தை இல்லை.. ஏக்கத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு!

 
chennai

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் கணவன் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை குன்றத்தூர் அருகே உள்ள ஒத்தவாடை பகுதியைச் சேர்ந்தவர் பரமானந்தம் (42). இவரது மனைவி ரேவதி (39). இவர்களுக்கு திருமணமாகி இதுவரை குழந்தை இல்லாததால் மனமுடைந்து காணப்பட்ட ரேவதி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

suicide

வெளியே சென்றிருந்த அவரது கணவர் வீடு திரும்பியபோது, ரேவதி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மனைவியின் இறுதிச் சடங்கை செய்வதற்கான பணிகளைச் செய்து வந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு சென்ற அவர்கள் தற்கொலை செய்து கொண்ட ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Kundrathur

விசாரணையில் ரேவதி திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் இருந்து வந்ததாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரேவதி தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

From around the web