28 வார கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி!!
May 27, 2025, 18:24 IST
மருத்துவமனை மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் 28 வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தான் கர்ப்பமடைந்தை தெரிந்த பின் மேலும் மன உளைச்சல் அடைந்துள்ளார். என்ன செய்வது என்ற முடிவெடுப்பதற்கு முன்னதாகவே கரு 21 வாரங்களை கடந்து விட்டது. மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுத்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி கேட்டிருந்தார். மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையிலும் 28 வாரங்கள் ஆன கருவை கலைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
