தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலெர்ட்!

 
rain

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்களான சேலம், காஞ்சிபுரம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது.

Heat wave

இந்த நிலையில், தமிழ்நாடு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (மே 7) முதல் மே 10-ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை 4 டிகிரி முதல் 7 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாடு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மே 7) வெப்ப அலை வீசம் கூடும் என்பதால் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை (மே 8), நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Rain

அதேநேரம், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 7) முதல் மே 12-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web