முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்.. திமுகவினர் இரங்கல்

 
Indrakumari

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74.

1991-ம் ஆண்டு அதிமுக சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திராகுமாரி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 முதல் 1996 வரை பொறுப்பு வகித்தார். தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாக விளங்கினார்.

Indrakumari

இவர் 2006-ல் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு திமுகவில் இலக்கிய அணி மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர், சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை அவர் மரணம் அடைந்தார். இவரது கணவர் பாபு வழக்கறிஞர் ஆவார். இவர்களுக்கு லேகா சந்திரசேகர் என்ற மகள் உள்ளார். இந்திராகுமாரின் உடல் அஞ்சலிக்காக அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Indrakumari

திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு நாளை (ஏப்ரல் 16) பெசன்ட்நகரில் நடக்கிறது.

From around the web