மக்களே.. ரேஷன் கார்டில் திருத்தம் செய்யனுமா? இன்று இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!!

 
Ration

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அரசு நியாய விலை கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்கும் மட்டும் இல்லாமல், ஒவ்வொருவரின் முகவரிக்கு ஆதாரமாகவும் ரேஷன் கார்டு இருந்து வருகிறது. மேலும், குடும்ப அட்டை மூலம், தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் நேரடியாக பெறவும் முடியும். இதனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் அட்டை முக்கியமாக கருதப்படுகிறது.

Ration-card

மாதாந்திர பொது விநியோகத் திட்டத்துக்கான மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று (பிப். 11) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகளை இந்த முகாம் மூலமாகப் பெறலாம்.

Ration

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு முதியவர்கள் மணிக் கணக்கில் காத்துக் கிடந்து ரேஷன் பொருட்கள் வாங்குவது சிரமமாக இருக்கும். அதற்காக இந்த அங்கீகாரச் சான்று தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படுகிறது.

From around the web