தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு.. இன்று 12 ரயில்கள் ரத்து.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

 
Train cancelled

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்தது. பல பகுதிகள் வெள்ளதால் சூழப்பட்டது. ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக இழந்து தவித்து வருகின்றனர்.

Train

இதனிடையே தென் மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு சென்ற விரைவு ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. குறிப்பாக கோவில்பட்டி ரயில் நிலையத்தை தாண்டி எந்த ரயிலும் செல்ல  முடியவில்லை. நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதோடு, மழை வெள்ளத்தால் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் தண்ணீர் புகுந்ததால் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அனைத்து ரயில்களும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மழை ஓய்ந்து தண்ணீர் வடிய தொடங்கியுள்ளதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

Express

இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - தூத்துக்குடி, திருச்செந்தூர் - நெல்லை ஆகிய விரைவு ரயில்கள் உட்பட 12 ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web