ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... வேட்புமனு தாக்கல் நிறைவு;  70-க்கும் மேற்பட்டோர் தாக்கல்

 
Erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ந் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள். 

இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன. அது போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் 29 வயதான சிவபிரசாந்த் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Erode

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளாரக தென்னரசு போட்டியிடுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிருவார் என்று அறிவிக்கப்பட்டது. பாஜக தலையீட்டிற்கு பிறகு ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு பெற்றது. 70-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 10-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பபெறலாம், அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெற்றதை தொடர்ந்து நாளை வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெறுகிறது. 

Erode

வேட்புமனு நிறைவுபெறும் நேரத்திற்குள்ளான வந்த சிலருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், ஏராளமானோர் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர்.

From around the web