தமிழ்நாட்டில் இரண்டே நாளில் முட்டை விலை அதிரடி உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

 
Egg

தமிழ்நாட்டில் இரண்டே நாளில் முட்டை விலை அதிரடியாய் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம்  முட்டை விலை ரூ. 5.50 ஆக இருந்தது பின்னர் முட்டை விலை படிப்படியாக குறைந்து முட்டை விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

Egg

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி 5 பைசா உயர்ந்து ரூ. 4.80 ஆனது. 5 ஆம் தேதி மேலும் 5 பைசா உயர்ந்து ரூ. 4.85 ஆனது. 6 ஆம் தேதி மீண்டும் 5 பைசா உயர்ந்து ரூ. 4.90 ஆனது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.00 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு டஜன் முட்டையின் விலை ரூ.80 முதல் ரூ.84 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஒரு டஜன் முட்டை விலை ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி அதிகளவிலான பேக்கிங் நடைபெற்றுவதால் முட்டையின் தேவை அதிகமாகியுள்ளது.

eggs

இதனால், இரண்டே நாட்களில் முட்டை விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பண்டிகை தினங்கள் முடிவடையும் வரைக்கும் முட்டை விலை தொடர்ந்து உயர்வில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web