தனித்தனியே சமாதானம் செய்த எடப்பாடி பழனிசாமி?

 
ADMK

அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று உரையாற்றினார் 

பாஜ தலைமை கொடுத்த நெருக்கடியின் காரணமாக கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. அதனால் கட்சி தலைவர்களை உடனடியாக அழைத்து ஆலோசனை நடத்த முடியவில்லை. அதிமுக – பாஜ கூட்டணி தேர்தல் கூட்டணிதான். அதேநேரம் அதிமுக கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளதால், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வருகிற மே 2ம் தேதி அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எடப்பாடி கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தியதாக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சில மாவட்ட செயலாளர்களை தனியே அழைத்து எடப்பாடி சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

From around the web