கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 
school-leave

கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. விழுப்புரம், கடலூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

school-leave

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (பிப். 2) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். 

அதேபோல திருவாரூர் மாவட்டத்திலும் காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (பிப். 2) விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் அறிவித்துள்ளார். 

leave

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

From around the web