தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2 பேர் டிஸ்சார்ஜ்..!

 
TCV

இன்று ஒரே நாளில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 36,10,652 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,97,153 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 2 பேர் குணமடைந்துள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,72,563 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 6 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 298 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,97,45,356 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று உயிரிழப்பு இல்லை, இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,081 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

From around the web