தொடர் கனமழை.. இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

 
school-leave

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் தாக்கத்தின் காரணமாக வட தமிழ்நாடு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Rain

இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதலே தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Leave

இதன் காரணமாக நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் தூத்துக்குடி மற்றும்  திருசெந்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மாவட்டம் முழுவதும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் ஆகிய 4 மாவட்டங்களில் திங்கள் கிழமை தான் அப்பகுதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web