அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து பலி! திருவண்ணாமலை அருகே பரபரப்பு

 
Dead-body

மங்கலம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை (15). இவர் மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வகுப்பறையில் இருந்த அஞ்சலை திடீரென மயங்கி விழுந்தார்.

Heart attack

இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் அவரை மீட்டு உடனடியாக மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்சு மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

அங்கு அஞ்சலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police

முதற்கட்ட விசாரணையில் அஞ்சலை இருதய பிரச்சினைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web