மாநில உரிமைக் காவலர் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமைச்சர் பி.டி.ஆர் நெகிழ்ச்சி!!

 
Stalin PTR

தமிழ்வேள் பி.டி.ராஜன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாநில உரிமைக் காவலர் என்று கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

”திராவிட அறநெறியாளர்  தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு” நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நீதியரசர் சி.டி செல்வம் பெற்றுக் கொண்டார்.விழாவில் பேசிய தமிழ்வேள் பி.டி.ராஜனின் பேரனும் அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “

சமூகநீதிக்கான போர்க்குரல், சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்திய அரசியலையே நெறிப்படுத்தும் திசைக்காட்டி  எனக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும் பாசத்திற்குரிய தலைவர் .

நாடே போற்றும் தலைவரின் கரங்களால் தமிழ்வேள் அவர்களின் வரலாற்றை பறைசாற்றும் நூலை வெளியிடுவதன் மூலம்  ஒரு வழித்தோன்றலாக  முன்னோர்களின் நினைவைப் போற்றும்  பண்பாட்டுக் கடமையை நிறைவேற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞருக்கு மிகவும் பிடித்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களை சமூகநீதிக் காவலர் என்று அழைப்பது போல் நம் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாநில உரிமைக் காவலர் என்று அழைக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்

From around the web