முதல் நாள் சமைத்த சிக்கன்.. மறுநாள் சாப்பிட்ட 12 வயது சிறுமி பரிதாப பலி.!

 
Ariyalur

ஜெயங்கொண்டம் அருகே உணவு ஒவ்வாமை காரணமாக 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உள்ள கூழாட்டுக்குப்பம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). இவரது மனைவி அன்பரசி (38). இந்த தம்பதிக்கு துவாரகா (15) இலக்கியா (12) என 2 மகள்களும் முகுந்தா என்ற மகனும் உள்ளனர்.

Chicken

இந்நிலையில் முதல் நாள் சமைத்து வைத்த சிக்கன் உணவை வீட்டில் உள்ள அனைவரும் சனிக்கிழமை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இலக்கியா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்ற 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

T.Palur PS

இதுகுறித்து தா. பழூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில், முதல்நாளான வெள்ளிக்கிழமை வீட்டில் சமைத்த கோழிக்கறி உணவை சனிக்கிழமை இரவு அனைவரும் சாப்பிட்டதால், உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web