சென்னையின் முதல் 'U' வடிவ மேம்பாலம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

 
MKS

சென்னை ஓ.எம்.ஆர் இந்திரா நகர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள 'U' வடிவ மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னு திறந்து வைத்தார்.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு சார்பாக மேம்பாலங்களை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் ராஜிவ் காந்தி சாலை மற்றும் இ.சி.ஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க காலை மற்றும் மாலை நேரங்களில் பீக் ஹவரில் 30 முதல் 40 நிமிடங்களுக்கு மேலாவதாகவும்,  இதற்கு அரசு தீர்வுகான வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

Chennai

இதையடுத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை இந்திரா நகர் சந்திப்பு பகுதியில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே ரூ.108 கோடி மதிப்பில் 'U' வடிவ மேம்பாலம் அமைக்கும் பணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

40 அடி இடைவெளியில், 20 துாண்களுடன், 'யு' வடிவ மேம்பாலம் அமைந்துள்ளது. மொத்தம், 250 மீட்டர் நீளம், 25 அடி அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணிக்கு இடையூறாக நின்ற மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, அருகில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

chennai

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.  சென்னையின் முதல் ‘யு’ வடிவ பாலம் 237 மீட்டர் நீளமும், 7.50 மீட்டர் ஓடுதள அகலமும் கொண்ட இரண்டு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தின் இரு புறத்திலும் தலா 120 மீட்டர் நீளத்திறகு அணுகு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

From around the web