கொண்டாடுங்க மாணவர்களே..! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
Leave

முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 13) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிபெருந் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிபெருந் திருவிழா கடந்த 26-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

Pudukkottai

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்துமாரியம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ம் நா (மார்ச் 12) அன்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அதனைத் தொடர்ந்து 9-ம் நாள் திருவிழாவான இன்று (மார்ச் 13) மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள். மாசிப்பெருந் திருவிழா இன்று (மார்ச் 13) காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

Local-holiday

இந்த நிலையில், இன்று (மார்ச் 13) தேரோட்டம் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 1-ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவித்துள்ளார். 12-ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web