நெல்லை அருகே ஆற்றில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி.. கோவிலுக்கு வந்த போது பரிதாபம்!

 
Nellai

நாங்குநேரி அருகே பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்த இடத்தில் சிறுவன் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பரப்பாடி அடுத்துள்ள பற்பநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். இவரது மகன் சந்திரமூர்த்தி (7). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மோசஸ் குடும்பத்துடன் நெல்லை அருகே கீழமுன்னீர்பள்ளத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு வந்தார்.

boy-dead-body

நேற்று மதியம் கீழமுன்னீர்பள்ளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் மோசஸ் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் சந்திரமூர்த்தி ஆழமான பகுதியில் குளித்த போது திடீரென நீரில் மூழ்கினார். அப்போது சிறுவன் காப்பாற்றும்படி கூச்சலிட்டார்.

இதனை கண்ட மோசஸ் உட்பட சிலர், சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சிறுவனின் உடல் தண்ணீரில் மூழ்கியது. இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வீரர்கள் மதியம் 3மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி மாலை 5 மணிக்கு சிறுவனின் உடலை மீட்டனர்.

Munnirpallam PS

பின்னர் பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்த இடத்தில் சிறுவன் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web