மாணவர்கள் கவனத்திற்கு.. ப்ளஸ்-1 மற்றும் ப்ளஸ்-2 துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

 
Exam

தமிழ்நாட்டில் ப்ளஸ்-1 மற்றும் ப்ளஸ்-2 துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது.  சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். அதனை தொடர்ந்து மே 6-ம் தேதி ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.  5.44 சதவீதம் பேர் தேர்வில் தோல்வி அடைந்தனர்.

Exam

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்,  துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கால அவகாசம் விடுக்கப்பட்டது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேர்வர்கள் மாவட்ட இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

govt-exam

இந்த நிலையில், ப்ளஸ்-1 மற்றும் ப்ளஸ்-2 துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ப்ளஸ்-2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ப்ளஸ்-1 துணைத் தேர்வுகள் ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

From around the web