மாணவர்கள் கவனத்திற்கு... 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு? 

 
School

தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . 

தமிழ்நாட்டில் கடந்த 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நேற்று 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 3-ம் தேதி தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 5-ம் தேதி தேர்வு முடிவடைகிறது. 

school

அதேபோல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த பொதுத்தேர்வுகள் முடிவடைந்த பின்னர் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது, ஏப்ரல் 24-ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 

DPI

தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதியே தேர்வுகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web