ரேஷன் அட்டைதாரர்களே கவனம்... இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து... என்னென்ன ரூல்ஸ் தெரியுமா?

 
Ration

ரேஷனில் இலவச பொருட்கள் பெறும் அட்டைதாரர்கள், புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

பல ரேஷன் அட்டைதாரர்கள் தகுதியில்லாமல், இலவச ரேஷனை பயன்படுத்தி வருவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதே நேரத்தில், தகுதியுள்ள பல ரேஷன் அட்டைதாரர்கள் அரசு திட்டங்களின் பலனைப் பெறவில்லை. இதுபோன்ற சூழலில் தகுதியில்லாதவர்கள் ரேஷன் கார்டுகளை உடனடியாக ஒப்படைக்க அதிகாரிகள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ration

ரேஷன் கார்டில் தகுதிக்கான நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் தகுதியற்றவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பச்சை ரேஷன் கார்டுகளில் ஏராளமானோர் சேர்க்கப்படுகின்றனர்.

புதிய மாற்றங்களின்படி, இந்த பலன்களை பெற ஒருவருக்கு 100 சதுர மீட்டருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது. குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் அரசாங்க வேலையில் இருக்கக் கூடாது. பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர் இருந்தாலோ, குடும்ப வருமானம் கிராமத்தில் இரண்டு லட்சத்துக்கும், நகரத்தில் மூன்று லட்சத்துக்கும் மேல் இருந்தாலோ அவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

Ration

அப்படிப்பட்டவர்கள் ரேஷன் கார்டை தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ரேஷன் கார்டை ஒப்படைக்கவில்லை என்றால், விசாரணைக்கு பின், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அத்துடன், அரசு விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி, அதுவரை பெற்ற இலவச ரேஷன் பொருட்களுக்கான பணம் வசூலிக்கப்படும்.

From around the web