இரண்டாந்தரக் குடிமக்களா தமிழர்கள்? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!!

 
Stalin

உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் நாள்தோறும் கட்சியினருக்கு மடல் எழுதி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் இந்தித் திணிப்பை எதிர்த்து விரிவாக எழுதியுள்ள முதலமைச்சர், ”இந்தி நம் நாட்­டின் தேசிய மொழி என்­றும் அதனை யாரும் புறக்­க­ணிக்­ கக் கூடாது என்­றும் பா.ஜ.க.வின­ரும் அவர்­க­ளின் கொள்கை வழி அமைப்­பி­ன­ரும் தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யின் தலை­வர் திரு.ஓம் பிர்லா அவர்­கள் சமஸ்­கி­ரு­தம்­தான் பார­தத்­தின் மூல­மொழி என்று அவை­யி­ லேயே குறிப்­பி­டு­கி­றார். இவை இரண்­டுமே தவ­றான பரப்­பு­ரை­யா­கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழ் மீது பிர­த­மர் மோடி மிகுந்த மதிப்பு வைத்­தி­ருக்­கி­றார் என்­றும், மாநில மொழி­க­ளின் வளர்ச்­சிக்­கா­கத்­தான் மும்­மொ­ழிப் பாடத்­திட்­டத்தைவலி­யு­றுத்­து­கிறோம் என்­றும் சொல்­கின்ற பா.ஜ.க. வினர் தங்­கள் ஆட்­சி­யில் தமி­ழுக்கு எவ்­வ­ளவு நிதி ஒதுக்­கி­யி­ருக்­கி­றார்­கள்? சமஸ்­கி­ரு­தத்­திற்கு எவ்­வ­ளவு நிதி ஒதுக்கி­யி­ருக்­கி­றார்­கள்?என்ற வேறு­பாடே, அவர்­கள் தமிழ்ப் பகை­வர்­கள் என்­பதை வெளிச்­ச­மிட்­டுக் காட்­டி­வி­டும்.

ஒன்­றிய கல்வி அமைச்­ச­கத்­தி­ட­மிருந்து பெறப்­பட்ட புள்­ளி­ வி­வ­ரங் க­ளின்அடிப்­ப­டை­யில் 2014ஆம் ஆண்டு முதல்2023ஆம் ஆண்டு வரை­யி­லான 10 ஆண்டு கால­கட்­டத்­தில் மத்­திய சமஸ்­கி­ரு­தப் பல்­க­லைக்­க­ழ­கம், தேசிய சமஸ்­கி­ரு­தப் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றுக்கு ஒதுக்­கப்­பட்ட தொகை ரூ.2,435 கோடி. இதே கால­கட்­டத்­தில் மத்­தியசெம்­மொ­ழித் தமி­ழாய்வு நிறு­வ­னத்­திற்குஒன்­றிய அரசு ஒதுக்­கி­யது ரூ.167 கோடி மட்­டுமே. சமஸ்­கி­ரு­தத்­திற்கு செல­வி­டப்­பட்­ட­தில் 7 விழுக்­காடு மட்­டுமே தமி­ழுக்குசெல­வி­டப்­பட்­டுள்­ளது. சமஸ்­கி­ரு­தத்­திற்­கும் இந்­திக்­கும் முன்­பை­விட பல மடங்குபணம் ஒதுக்­கப்­பட்டு, செல­வி­டப்­பட்டு வரு­கி­றது. ஓட்­டுக்­காக உதட்­ட­ள­வில் தமிழை உச்­ச­ரித்து, உள்­ள­மெங்­கும் ஆதிக்க மொழி­யு­ணர்வு கொண்டு செயல்­ப­டு­கி­றது ஒன்­றிய அரசு. தமிழ் உள்­ளிட்ட மாநில மொழி­க­ளைப் பேசு­ப­வர்­களை இரண்­டாந்­தர குடி­மக்­க­ளாக நடத்த முயற்­சிக்­கி­றது,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்­நாட்­டுக்­கு­ரிய நிதி­யைத் தரா­மல் வஞ்­சிப்­பது போலவே தமி­ழுக்­குரிய நிதி­யை­யும் ஒதுக்­கா­மல் ஒன்­றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்­சித்து வரு­கி­றது. தமி­ழைப் போலவே இந்­தி­யா­வின்பிறமாநில மொழி­க­ளை­யும் ஆதிக்க மொழி­க­ளைக் கொண்டு அழிக்­கத் துடிக்­கி­றது. மொழித்திணிப்பு ஒரு நாட்­டில் எத்­த­கைய விளை­வு­களை உண்­டாக்­கும் என்­பதைஉலக சரித்­தி­ரத்­தைப் புரட்­டி­னால்புரிந்­து ­கொள்­ள­லாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

From around the web