இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களா? ஒன்றிய அரசை சாடிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!!
Apr 19, 2025, 10:43 IST

இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற ஒன்றிய பாஜக அரசு சதி செய்து வருகிறது என்று கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
“நாட்டின் சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் போராடிக் கொண்டிருந்த போது, ஆர்.எஸ்.எஸ் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்தது. இதுதான் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் வரலாறு. ஆனால், இன்று குடியுரிமை திருத்த சட்டம், வக்ஃப் திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்ற சதி செய்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.