அமித்ஷா மதுரை வருகை.. ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்திய பாஜக வீடியோ வைரல்!!
மதுரையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்று வருத்தப்பட்டுப் பேசினார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா. மேலும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பறைசாற்றினார்.
இந்நிலையில் ஒடிசா தேர்தலின் போது பூரி ஜெகன்னாத் ஆலயத்தின் சாவிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று பேசிய பேச்சும், தமிழன் ஒடிசாவை ஆள்வதா என்ற கேள்வியுடன், தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான வீடியோவும் மீண்டும் சமூகத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசாவின் உணவை வாழை இலையில் ஊற்றி சாப்பிடமுடியாமல் தடுமாறும் தமிழர் என்ற வகையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவுடன் பாஜகவை நோக்கு பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
இதுதான் பிஜேபி
— Haraappan (@haraappan) June 9, 2025
இந்த காணொளி தேர்தலுக்காக ஒடிசாவில் பிஜேபியால் தமிழர்களை இழுவுப்படுத்தி எடுத்த தேர்தல் விளம்பரம்
தமிழர்களை இனரீதியாக கேலியும் அசிங்கமும் படுத்திவிட்டு நேற்று தமிழ் பேச முடியவில்லை என்று நாடகம் ஆடுகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா
ஓட்டுக்காக தமிழர்களின்… pic.twitter.com/xH5IxSlI4g
