அதிமுகவின் சொம்பு விஜய்.. ப்ளூசட்டை மாறனின் சுளீர் கேள்விகள்

திமுக ஆட்சிக்கு எதிராகப் பேசும் நடிகர் விஜய், ஏ 1 குற்றவாளியாக தண்டனை பெற்ற ஜெயலலிதா பற்றியும் அதிமுக ஊழல்கள் பற்றியும் பேசாமல் மௌனம் காப்பது ஏன் என திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன் கேள்விகளை அடுக்கியுள்ளார்.
”திமுகவிற்கு எதிராக பொங்கும்போதுமட்டன் பிரியாணி போல மாஸ் காட்டும் விஜய்.. அதிமுகவை பற்றி இதுவரை ஒருவார்த்தை கூட பேசாத..ஆறிப்போன குஸ்கா போல இருக்கிறார்.
கேட்டால்.. ஆளுங்கட்சியை எதிர்ப்பது தான் வீரம் எனும் மொக்கை லாஜிக் வேறு. நாட்டை ஆளும் பாஜகவிற்கு எதிராக அரசியல் செய்து.. அறுத்து தள்ளிட்ட மாதிரி. ஆளும் திமுக அரசை விமர்சிக்க வேண்டும் என்பது முற்றிலும் சரி. ஆனால் அதிமுக தமிழ்நாட்டை ஆண்டு 50 ஆண்டுகளா ஆகிவிட்டது?
2021 வரை. 10 வருடங்களாக அவர்களின் ஆட்சிதானே? ஊழல், லஞ்சம் பற்றி வாய் கிழிய பேசும் நீங்கள்..A1 என குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஜெயலலிதாவை பறறி பேசாமல் பம்முவது ஏன்? எடப்பாடி ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லையா?
ஜெ.வை விமர்சித்தால் பெண்களின் வாக்குகள் கிடைக்காது எனும் பீதியா? தேர்தல் சமயத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த அமைதியா? ஒரு சாமான்ய மனிதரை கேட்டால் கூட.. திமுகவும், அதிமுகவும் எங்களை ஆண்டதுபோதும். புதிதாய் வரும் நேர்மையான தலைவரின் கட்சிக்கு இம்முறை வாய்ப்பு அளிப்போம் என ஒவ்வொரு முறையும் கூறுவதுண்டு.
ஆனால் நீங்கள் அந்த சாமான்யருக்கு உள்ள புரிதல் கூட இல்லாமல்.. திமுகவை மட்டும் கடித்து வைத்து. அதிமுகவின் மறைமுக சொம்பு போல செயல்படுவது... முதுகெலும்பற்ற செயல் உங்கள் சாயம் வேகமாக வெளுத்து வருகிறது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மாறன்.
அம்மா உணவகத்தின் வெஜ் குஸ்கா.
— Blue Sattai Maran (@tamiltalkies) March 28, 2025
திமுகவிற்கு எதிராக பொங்கும்போதுமட்டன் பிரியாணி போல மாஸ் காட்டும் விஜய்.. அதிமுகவை பற்றி இதுவரை ஒருவார்த்தை கூட பேசாத..ஆறிப்போன குஸ்கா போல இருக்கிறார்.
கேட்டால்.. ஆளுங்கட்சியை எதிர்ப்பது தான் வீரம் எனும் மொக்கை லாஜிக் வேறு.
நாட்டை ஆளும்…