பரபரப்பான சூழலில் கூடுகிறது அதிமுக செயற்குழு!!

 
AIaDMK

அதிமுக - பாஜக கூட்டணிக்கு கட்சிக்குள்ளேயே சலசலப்புக்ள் ஏற்பட்டதையொட்டி மாவட்டப் பொறுப்பாளர்கள் / செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி கறிவிருந்து வைத்தார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. பாஜக கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர்களை தனித்தனியே சமாதானமும் செய்து வைத்தார்.

இந்நிலையில் கட்சியின் முக்கிய அமைப்பான செயற்குழு கூட்டம் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பாஜக தற்போதைய தலைவரும் முன்னாள் அதிமுக மாநில நிர்வாகி தான் என்பதை முன்னிறுத்தி, அவருடன் எடப்பாடி பழனிசாமி பேசியவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் முடித்து வைத்த சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிரிகள் என்பதால் நயினார் நாகேந்திரனும் எடப்பாடி பழனிசாமியும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக மாறி இந்த மூவரின் அரசியல் எதிர்காலத்தை குழி தோண்டிப் புதைக்கப் போகிறார்கள் என்ற பேச்சும் உலவுகிறது. 

செயற்குழுவில் என்ன பிரச்சனைகள் கிளம்ப்போகிறது அதை எப்படி சமாளிக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

From around the web