வியாசர்பாடியில் சோகம்!! தாய், மகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை!!

 
Vyasarpadi

வியாசர்பாடியில் ஒரே வீட்டில் மகன் தாய் என இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியில் வசித்து வருபவர் ரகுநாதன். இவருக்கு இளவரசி என்ற மனைவியும்  சுசில் (21) என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் சுசில் பி.காம் வரை படித்துவிட்டு கொடுங்கையூர் சேலை வாயில் பகுதியில் நடனப் பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக உள்ளார். சுசில் தினமும் நடன வகுப்பு முடித்து இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது தந்தை ரகுநாதன் கண்டித்துள்ளார்.

Suicide

இதனால் சுசில் மற்றும் அவரது தந்தை ரகுநாதன் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் படுக்கையறைக்கு சென்ற சுசில் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் சுசில் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தனது மகன் அறைக்கு சென்று பார்த்தபோது மகன் சுசில் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து சுசிலை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . சிறிது நேரத்தில் இளவரசி நான் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது மகன் அறைக்கு சென்று அதே மின்விசிறியில்தூக்கு மாட்டிக் கொண்டு இறந்துள்ளார்.

Vyasarpadi

சிறிது நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் இளவரசியும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்கேபி நகர் போலீசார் இளவரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web