சோகம்! நெல்லை அருகே ஒன்றரை வயது குழந்தையை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை!

 
baby

திருநெல்வேலியில் ஒன்றரை வயது மகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாச்சலபுரம் மேலத்தெருவில் வசித்து வருபவர் மகேந்திரன் (30). இவர் தனது தந்தைக்கு உதவியாக இருந்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகள் பிரவீனாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் அகிமா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று மகேந்திரன் மற்றும் அவரது பெற்றோர் ஊருக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு காலையிலேயே புறப்பட்டு சென்றுவிட்டனர். பிரவீனாவும், அவரது குழந்தையும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மாலை நேரத்தில் முத்துப்பாண்டி தனது மகள் பிரவீனாவை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

suicide

அப்போது அங்குள்ள அறையில் ஒரே சேலையில் தாய், மகள் இருவரும் 2 முனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர். இதனை பார்த்த முத்துப்பாண்டி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பிரவீனா, அவரது குழந்தை அகிமா ஆகியோரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். சமீப காலமாக பிரவீனாவுக்கும், மகேந்திரன் மற்றும் அவரது பெற்றோருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதங்கள் எழுந்து வந்துள்ளது. அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீனா தனது குழந்தையின் கழுத்தில் சேலையை கட்டி இறுக்கி கொலை செய்துவிட்டு, அந்த சேலையின் மற்றொரு முனையில் தனது கழுத்தை கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Devarkulam

எனினும் குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையில் மகளைக் கொலை செய்துவிட்டுத் தாயும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web