பிரதமர் மோடியின் பிறந்தநாள் போஸ்டர் மீது சாணி வீச்சு.. சிசிடிவியால் பெண் கைது!! தாம்பரத்தில் பரபரப்பு

 
Chennai

சென்னையில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் ஒரு பெண் சாணியடித்த சம்பவம் பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை முழுவதும் பாஜகவினர் வாழ்த்து போஸ்டர் ஒட்டிருந்தனர். அந்த வகையில் மேற்கு தாம்பரம், முல்லைநகர் பகுதியில் உள்ள பாஜகவினரால் நேற்று முன்தினம் ஏராளமான போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

Poster

இந்த நிலையில் முல்லை நகர் பிரதான சாலையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்களில் மர்மநபர்கள் சாணி அடித்திருந்தனர். இன்று காலையில் இந்த போஸ்டரைப் கண்டு பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர். 

இதையடுத்து தாம்பரம் நகர பாஜக தலைவர் கணேஷ் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பியதுடன் ஊர்வலமாகச் சென்று தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்.

women-arrest

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இன்று ஒரு பெண், மோடி போஸ்டரின் மீது சாணி அடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் தாம்பரம் பகுதி பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web