கார் விபத்தில் பலியான தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரருக்கு சட்டபேரவையில் இரங்கல்

 
Condolences-to-the-Tamil-Nadu-table-tennis-player

கார் விபத்தில் பலியான தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு சட்டபேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டம் கடந்த 6-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. அன்றைய தினம் முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. கடந்த 13-ம் தேதி வேளாண்மை, மீன் வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 14 முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டபேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டபேரவை காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டபேரவை தொடங்கியதும் முதலில் மேகாலயா மாநிலத்தில் கார் விபத்தில் பலியான தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு இரங்கல் மற்றும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்பு துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றறு.

From around the web