ரூ. 18 ஆயிரம் சம்பளம்.. 1743 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு!

 
Nurse

தமிழ்நாட்டில்பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் உள்ள செவிலியர் 1,743 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான 1,743 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பதார்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

nurse

பணியின் விவரங்கள்:

தென்காசி - 10, ராமநாதபுரம் -  57, சிவகங்கை - 41, தூத்துக்குடி - 42, விருதுநகர் - 13, நாமக்கல் - 210, மதுரை - 88, கிருஷ்ணகிரி - 172, திருப்பூர் - 126, கன்னியாகுமரி - 40, புதுக்கோட்டை - 114, தஞ்சாவூர் - 140, திருச்சி - 119, கோயம்புத்தூர் - 119, பெரம்பலூர் - 61, செங்கல்பட்டு - 35, திருப்பத்தூர் - 31, மயிலாடுதுறை - 101, திருவள்ளூர் - 78, கள்ளக்குறிச்சி - 54, நாகப்பட்டினம் - 69, வேலூர் - 23

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்குச் செவிலியர்கள் அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

From around the web