சேலம் பார்பிகுயின் ரெஸ்டாரண்டில் அழுகிய மட்டன் கிரேவி... 5 கிலோ இறைச்சிகள் பறிமுதல்.!

 
Salem

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள இந்த பார்பி குயின் ஓட்டலில் சபரி என்ற வாடிக்கையாளர், மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி பணம் கொடுத்து வாங்கிச் சென்று உள்ளார். வீட்டுக்கு சென்று பார்த்த பொழுது , மட்டன் கிரேவி கெட்டுப் போன நிலையில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த உணவை எடுத்துக்கொண்டு உணவகத்திற்கு வந்து திருப்பி கொடுத்துள்ளார். அதனை திறந்து பார்த்த ஊழியர் அது கெட்டுபோயிருப்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் அங்கு வந்த மேலாளரிடம் தெரிவித்த போது அவர் கெட்டு போயிருந்தால் கீழே ஊற்றி விடுங்கள் என்று மெத்தனமாக கூறியதால் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Salem

கெட்டுபோன இறைச்சியில் செய்யப்பட்ட கிரேவியை கொடுத்து விட்டு , அலட்சியமாக பதில் சொன்ன பார்பிகுயின் நிர்வாகத்துக்கு எதிராக சபரி ஓங்கி குரல் எழுப்பினார். மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சபரி உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து அந்த ஓட்டலின் சமையல் அறைக்குள் நுழைத்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர் . அங்கிருந்து கெட்டு துர்நாற்றம் வீசிய 5 கிலோ எடையுள்ள மட்டன் மற்றும் சிக்கன் இறைச்சிகளை கைப்பற்றினர். வீணாப்போன பிரியாணியையும், சவர்மா மற்றும் கிரில் சிக்கனுடன் சேர்த்து வழங்குவதற்காக பல நாட்களுக்கு முன்பு போடப்பட்ட கெட்டுபோன மைதா ரொட்டிகளையும் கைப்பற்றி அழித்தனர்.

Salem

காலாவதி தேதி ஏதும் குறிப்பிடாத மசாலா பொருட்களையும் அங்கிருந்து பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றின் தன்மை குறித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளதோடு, பார்பிகுயின் ஓட்டல் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர். அபராதம் குதித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

From around the web