ரேஷன் கார்டுக்கு ரூ. 1,000... பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!!

 
Pongal-package-announced-by-stalin

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன. 9) தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழுக் கரும்பு, பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் இன்று (ஜன. 9) முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நாள்தோறும் 200 பேருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

Pongal

அரிசி, சா்க்கரை ஆகியன ஏற்கெனவே நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், முழுநீளக் கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன. 9) பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கப்படவுள்ளது. சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா்.

pongal

இதைத் தொடா்ந்து, பிற மாவட்டங்களிலும் தொடங்கப்படுகிறது. அதன்படி வரும் 13-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி டோக்கன் பெற்றவர்கள், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சென்று பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம்.

From around the web