இந்தி விருப்ப மொழியாக இருக்கலாமே தவிர, கட்டாயமாக இருக்கக்கூடாது - அமைச்சர் பொன்முடி

 
There-is-no-benefit-to-students-from-the-new-education

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

புதிய கல்வி கொள்கை மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது என்றும், மாநில கல்வி கொள்கையை உருவாக்க முதல்வர் குழு நியமித்துள்ளார் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. புதிய கல்விக் கொள்கையால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்பதால் அதை எதிர்க்கிறோம் என்று கூறினார்.

மேலும், இந்தி விருப்ப மொழியாக இருக்கலாமே தவிர, கட்டாயமாக இருக்கக்கூடாது. இந்தி திணிக்கப்படவில்லை, விருப்ப மொழிதான் என்பதை ஒன்றிய அரசிடம் ஆளுநர் கொண்டு செல்வார் என் நம்புகிறோம். தனியார் பயிற்சி மையங்களில் வளர்ச்சியை நுழைவுத்தேர்வுகள் ஊக்குவிக்கின்றன. மொழிவாரியாக வேறுபட்டாலும், திராவிடர் எனபதில் ஒன்றுபட்டுள்ளோம் என்று கூறினார்.

From around the web