மின் இணைப்புடன் ஆதாரை இம்மாத இறுதிக்குள் இணைத்திடுங்கள்... அமைச்சர் செந்தில் பாலாஜி

 
EB-Aadhar

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நவம்பர் 28-ம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வருகிற 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்குமாறு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

EB

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் கால அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று மதியம் வரை 2 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இணைத்த மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இதுவரை மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜனவரி 31-க்குள் இணைத்திட வேண்டுகிறேன் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இணையதளத்திலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் சார்பில் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது. மின் நுகர்வோர்கள் இணையதளம் மூலமாகவும் நேரடியாக சிறப்பு முகாம்கள் மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், முதல்வரின் வழிகாட்டுதலின்படி துவங்கப்பட்ட, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று மதியம் வரை 2 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இணைத்த மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இதுவரை மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜனவரி 31-க்குள் இணைத்திட வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web