இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை - அரசு அறிவிப்பு

 
College-school

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

chess

இதற்கான ஏற்பாடுகள் முதல்வர் தலைமையில் அமைத்து துறை அமைச்சர்களும் மேற்கொண்டு  வருகின்றனர்.  மேலும் ஓவ்வொறு மாவட்ட வாரியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படு பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒட்டி மாமல்லபுரத்தில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டு அனைத்து பணிகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், அழைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Local-holiday

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஜூலை 28-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web