பட்டையை கிளப்பிய பாட்டியின் நடனம்!! இளைஞர்களுக்கு இணையாக குத்தாட்டம்!! வைரல் வீடியோ

 
Chennai

சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இணையாக குத்தாட்டம் போட்ட பாட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்வதால் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை அறிவித்திருந்தது.

அதன்படி ஒரு நாள் முழுக்க எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மொத்த குடும்பமும் தெருக்களில் ஓடியாடி விளையாட வேண்டும் என்பதற்காக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கடந்த 4-ம் தேதி முதல் வாகனம் இல்லா ஞாயிற்றுக்கிழமை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

Chennai

அதன்படி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்படும் என்றும் சாலைகளில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுடன் விளையாடலாம், உடற்பயிற்சி செய்யலாம் அல்லது ஏதேனும் பயிற்சிகளில் ஈடுபடலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சென்னை பெசன்ட் நகர் ஆறாவது அவென்யூ கிழக்கு பகுதியில் உள்ள 32 வது குறுக்குத் தெருவில் இருந்து மூன்றாவது பிரதான சாலை சந்திப்பு வரை இந்த வாகனம் இல்லா ஞாயிற்றுக்கிழமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் வாகனம் இல்லா ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு மூதாட்டி, இளைஞர்களுக்கு ஈடு கொடுத்து ஆடிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இன்று மட்டுமல்லாமல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 2, 16, 23 ஆகிய தேதிகளில் இந்த வாகனம் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web