தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்வு.! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
Gold-Price

மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் ஒரு போதும் குறைந்தது இல்லை. கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்திருந்த நிலையிலும் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். ஆனால் அந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது.

கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அதற்கேற்றாற்போல் தற்போது பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து விற்பனையாகிறது.

Gold & Silver

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 31 ரூபாய் உயர்ந்து, ரூ.5,221-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, ரூ.41,768-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,251-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 26 ரூபாய் உயர்ந்து, ரூ.4,277-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold-Price

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து, ரூ.74,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web