இந்த பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது - கூட்டுறவுத் துறையின் அதிரடி உத்தரவு!

 
Handprint-registration-at-ration-shops-New-order

ரேஷன் கடையில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

Ration

இந்த சூழலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் பொருட்கள் தரமில்லாமல் இருக்கும் பட்சத்தில் அதை திரும்பி அனுப்பலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், “நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரிபார்த்து தரமானஅரிசியை மட்டுமே நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நியாய விலைக்கடைகள் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

Ration-Shop

குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசியப்பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும்.அரிசியின் தரத்தினை கிடங்குகளில் சரிபார்த்து, தரமான அரிசியை மட்டுமே நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும்” என அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

From around the web