முதல்வர் குறித்து சர்ச்சை போஸ்டர்... தலைமறைவான அண்ணாமலை உதவியாளர்.. தட்டி தூக்கிய போலீஸ்!!

 
Annamalai-asst

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த அவதூறு போஸ்டர் விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வட சென்னை பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வண்ணம் கடந்த 11-ம் தேதி போலி பத்திரிகை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர். 

Politics

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், வண்ணார்பேட்டையை சேர்ந்த பிலிப்ராஜ், இந்து ஜனநாயக முன்னணி சென்னை மாநகர செயலாளர் சத்யநாதன், சிவகுருநாதன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதில் சிவகுருநாதன் முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் 5 ஆயிரம் போஸ்டர்களை சிவகாசியில் அச்சடித்து அவற்றை வழங்கறிஞர்கள் இருவரின் உதவியோடு, சத்யநாதன், பிலிப்ராஜ் ஆகியோருக்கு அனுப்பி வைத்து சென்னையில் ஒட்டியது விசாரணையில் தெரியவந்தது. 

இந்த போஸ்டர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதன் பேரில் அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதன் என்பவருக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமார் முருகனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். 

arrest

பின்னர் அடையாறில் உள்ள அவருக்கு சொந்தமான அரசியல் ஆராய்ச்சி மையத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web