இரவு உணவு சாப்பிட்ட 11-ம் வகுப்பு மாணவர் மர்ம மரணம்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்

 
karur

கரூரில் 11-ம் வகுப்பு மாணவன் நேற்றிரவு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் காக்காவாடி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள தம்மணபட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சரவணனின் மகன் சந்தோஷ் குமார்(15) விடுதியில் தங்கி 11 ம் வகுப்பு படித்து வந்தார். 

Karur

இந்த நிலையில் நேற்று இரவு பள்ளியின் விடுதியில் உணவு அருந்த சென்ற போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தினர் அவரை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தோஷ் குமாரை பரிசோதித்த மருத்துவர் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தோஷ் குமாரின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Aravakurichi-PS

இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் தந்தை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகம், விடுதி காப்பாளர், பள்ளி தாளாளர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி, எனது மகன் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்றுகொண்ட அரவக்குறிச்சி போலீசார், மாணவர் உயிரிழந்தது குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web