கத்தியை காட்டி பாமக நிர்வாகிக்கு மிரட்டல்.. அதிமுக நிர்வாகி கைது!!

 
ADMK

தண்டல் பணம் செலுத்ததால் பாமக நிர்வாகியை அதிமுக நிர்வாகி கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமம் தசரதபுரம் காவேரிரங்கன் தெருவில் எல்.கே.வி ஸ்டோர் அமைந்துள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ஞானசேகர். இவர் பாமக கட்சியின் 127வது வட்ட துணை செயலாளராக உள்ளார். இவரை அதிமுக பிரமுகர் வெங்கடேசனிடம் வாங்கிய பண விவகாரம் தொடர்பாக கத்திய காட்டி மிரட்டியதாக புகார் அளித்தார்.

அதில் அதிமுக பிரமுகர்  வெங்கடேசனிடம் 20 ஆயிரம் ரூபாய் கடனாக தண்டலுக்கு பணம் வாங்கியாதகவும், அதனை தொடர்ந்து வட்டியுடன்  நாள்தோறும் கட்டி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

murder

மேலும், கடந்த 29-ம் தேதி ஞானசேகரன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றதால் தினந்தோறும் செலுத்த வேண்டிய தொகையான 200 வீதம் 7 நாட்களுக்கு என ரூ.1,400 செலுத்தாமல் இருந்துள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன்  தனது செல்போனுக்கு பணத்தை கட்டமுடியுமா? முடியாதா? எனக்கேட்டு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று காலை இருவருடன் கடைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளதாகவும், அப்போது அருகில் கடையில் இருந்த வியபாரிகள் ஒன்றுக்கூடி சத்தம் போடவே அங்கிருந்து தப்பி சென்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

Bangladeshi-Teen-Arrested-While-Sneaking-Into-India

மேலும் இது குறித்து வீடியோ ஆதாரங்களோடு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அதிமுக நிர்வாகி வெங்கடேஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web