கடப்பா கல் விழுந்து 7 வயது சிறுவன் பலி!! விளையாடிய போது நேர்ந்த கொடூரம்

 
Perambalur

பெரம்பலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி இளவரசி. இவர்களது மகள் சுபத்ரா (9), மகன்கள் சுசிவின்ராஜ் (7), சுபிராஜ் (3). இன்று அதே பகுதியில் இறப்பு நிகழ்விற்கு சரவணன் சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரது 3 பிள்ளைகளும் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டின் வெளிப்புறத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த கடப்பா கல்லை சிறுவன் சுசிவின்ராஜ் இழுத்த போது பாரம் தாங்காமல் சிறுவன் மீது விழுந்துள்ளது. சிறுவன் மீது விழுந்த நிலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தோடியுள்ளது. அடிபட்டதை அறிந்த சிறுவனின் அக்கா சுபத்ரா கடப்பா கல்லை எடுத்து தம்பியை தூக்க முயன்றுள்ளார்.

Perambalur

பிறகு வீட்டின் அருகே பேசி கொண்டிருந்த தாத்தா பாட்டியிடம் சொல்லி வந்து பார்த்த போது நீண்ட நேரம் இரத்தம் வழிந்தோடியதால் சிறுவன் இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சரவணன், சுபத்ரா ஆகியோர் சுசிவின்ராஜின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுசிவின்ராஜ் பெரம்பலூரில் உள்ள ஆர்.சி.பாத்திமா தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Perambalur

சுசிவின்ராஜின் தாயான இளவரசி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் குழந்தைகளை, அவர்களது தந்தையான சரவணன் கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சுசிவின்ராஜ் இறந்துள்ளான். தாய் தற்கொலை செய்து 4 மாதங்களே ஆன நிலையில் எதிர்பாராதவிதமாக கல் விழுந்து மகனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web