6 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிட மாற்றம் செய்து வருகின்றது. அந்த வகையில், 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜவஹர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிட்கோ மேலாண் இயக்குநராக இருந்த டி.ஆனந்த் ஐஏஎஸ் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுபோல் அந்தத் துறையின் நலத்துறை செயலாளராக ஜவகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மீன்வளத் துறை செயலாளராக ஏ.கார்த்திக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளராக மங்கத்ராம் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், மணிவாசன் ஐஏஎஸ் பொதுப்பணித் துறை செயலாளராகவும், எஸ்.மதுமதி ஐஏஎஸ் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.